×

உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை

காசியாபாத்: உ.பி.யின் மேற்கு பகுதியில் மாற்றத்திற்கான காற்று வீசுகிறது என்றும் காசியாபாத் முதல் காசிப்பூர் வரை உள்ள அனைத்து தொகுதிகளிலும் இந்தியா கூட்டணிக்கே வெற்றி கிடைக்கும் என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.

அகிலேஷ் கூறுகையில்,‘‘ உபியின் மேற்கு பகுதியில் மாற்றத்திற்கான காற்று வீசுகிறது. முதல் கட்ட தேர்தல் மேற்கு உபியில் நடக்கிறது. முதல் கட்ட தேர்தலில் ஏற்படும் மாற்றம் உபி மாநிலம் மற்றும் நாடு முழுவதிலும் எதிரொலிக்கும். உபியின் மேற்கு எல்லையான காசியாபாத்தில் இருந்து கிழக்கு எல்லை காசிப்பூர் வரையில் அனைத்து தொகுதிகளிலும் பாஜவை வீழ்த்தி இந்தியா கூட்டணி வெற்றி பெறும். பாஜ அளித்த வாக்குறுதிகளான விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படவில்லை.

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கப்படவில்லை.உபி மாநில தேர்வாணைய தேர்வுக்குரிய கேள்வி தாள்கள் வெளியாகி 60 லட்சம் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. நாட்டில் உள்ள மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். மேற்கு உபியில் மாற்றத்திற்கான காற்று வீச தொடங்கியுள்ளது.தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்’’ என்றார்.

The post உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : wave of ,Akhilesh ,Ghaziabad ,Samajwadi Party ,Akhilesh Yadav ,UP ,All India Alliance ,Ghazipur ,UP… ,
× RELATED அரசியலமைப்பை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றி விடுவார்கள்: அகிலேஷ்